districts

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி: 30,123 பேர் பதிவு

திருவண்ணாமலை,பிப்.26- திருவண்ணாமலையில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டியில் கலந்து கொள்ள 30,123 பேர்  பெயர்களை பதிவு செய்துள்ளனர்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  இதில் தடகளம், செஸ், கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிண்டன், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டி களில் இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டும் பங்கேற்க அனு மதிக்கப்பட்டு வருகின்றனர்.  போட்டிகளில் பங்கேற்பதற்காக தனி நபர்கள் பிரிவில் 11 ஆயிரத்து 560 பேரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 18 ஆயிரத்து 563 என மொத்தம் 30 ஆயிரத்து 123 பேர் பதிவு செய்துள்ளனர்.  சிலம்பம்-இறகுபந்து இப்போட்டிகள் தொடக்க நாளில் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட்டது. பின்னர் மாற்றுத் திறனாளி களுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி பிரிவினர்களுக்கு ஆண்களுக்கான தடகள போட்டிகளும், பெண்களுக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.  பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவினர்க ளுக்கு சிலம்பம் மற்றும் இறகுப் பந்து போட்டி களும், ஆக்கி போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.