districts

img

வந்தவாசியில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

திருவண்ணாமலை,மார்ச் 7- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கெதிரான 1 கோடி கையெழுத்து இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வாலிபர் சங்க மாநில தலைவர் எஸ்.காரத்திக், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  சி.எம்.பிரகாஷ், தலைவர் சி. முருகன், பொருளாளர்  சுகுமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மாநில துணை பொதுச் செயலாளர்  பி.செல்வன், அப்துல்காதர்,  யாசர் அராபத் சமூக ஆர்வலர்  அரிதாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, மேள தாள முழக்கங்களுடன் மாணவர்கள்-இளைஞர்கள் ஊர்வலமாக சென்று கையெழுத்து வாங்கினர். பொது மக்கள் திரளானோர் ஆர்வத்துடன் கையெழுத்துபோட்டனர்.

;