திருவண்ணாமலை, மார்ச் 23- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த உள்ளது தென்முடியனுர் கிராமம். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 80 ஆண்டு காலமாக பட்டியல் இன மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி பட்டிய லின மக்களை மாவட்ட ஆட்சியர் பா.முரு கேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் கே.கார்த்திகேயன் ஆகியோர் முன்னி லையில் ஆலயத்திற்குள் நுழைந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தென்முடியனுர் கிராமத்தில் உள்ள ஜெய்பீம் நகரில் இந்திரா என்பவரிம் பெட்டிக்கடை மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது, கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஆசிரியர் முருகன் வீட்டிற்கு வந்த ஆதிக்க சாதியினர் தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சாதாரண வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும், இது போன்ற வழக்குகளில் துணை காவல் கண்காணிப்பாளர் அளவி லான அதிகாரியை விசாரணை அதிகாரி யாக நியமிக்க வேண்டும் ஆனால் அதே போல் விசாரணை அதிகாரியும் நியமிக்கப் படவில்லை என குற்றம் சாட்டு தெரிவித்து, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ப.பா.மோகன் தலைமையில் வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்த னர். இதுகுறித்து ப.பா.மோகன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், எஸ்சி எஸ்டி வழக்கு பதிவு செய்தால் மனுதாரருக்கு ஒவ்வொரு கட்ட விசாரணையையும் தெளிவு படுத்த வேண்டும், ஆனால் இன்று வரை தென்முடியனூர் கிராமத்தில் நடைபெறும் விசாரணை குறித்து மனுதாரரிடம் எந்த விதமான விவரங்களையும் காவல்துறை யினர் தெரிவிக்கவில்லை. ஆசிரியர் முருகன் மீது கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மற்றும் இந்திரா கடைக்கு தீ வைத்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கோகுல்ராஜ், கண்ணகி முருகேசன், சங்கர் ஆகிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்ட பின்னரும் கூட சமூக அநீதி தொடர் கிறது என குற்றம் சாட்டினார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், வழக்கறிஞர் எஸ்.அபிராமன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.