districts

img

ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் முறைகேடு: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 8- 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் முறை கேட்டில் ஈடுபடும் ஜிவிகே - ஈ எம்ஆர்ஐ நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத்துறை அதி காரிகளிடம் புகார் தெரிவித்ததற் காகவும், அது தொடர்பாக  வழக்குகள் நடத்திய தற்காகவும் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், சட்ட விரோதமாக செயல்படும் திட்ட மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் சாமிவேல்,  பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் சந்தோஷ், சென்னை மண்டலச் செயலாளர் மகேஷ் ஆகியோர் பேசினர்.