districts

வந்தவாசி அருகே வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

திருவண்ணாமலை,அக்.11- வந்தவாசி தாலுகா வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (31). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் 9 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணா மலை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி செவ்வாயன்று(அக்.11) தீர்ப்பு கூறினார். அதில், நவீன் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதைத்தொடர்ந்து நவீன்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

;