திருவண்ணாமலை, பிப். 10- திருவண்ணாமலை தாலுகா பழையனூர், நாச் சானந்தல் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத் தில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. நல்லவன் பாளையம் கிராமத்திலும் மாற்றுத் திறனாளிகள் வேலை செய்ய வேண்டுமெனில் காலையில் வேலைக்கு வரும்போது கடப்பாரை, மண்வெட்டி, கலையம் ஆகிய கருவி களை கொண்டு வரவேண் டும், எட்டு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என மாற்றுத் திறனாளிகளை அலைக் கழிப்படுகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் வெள்ளி யன்று(பிப்.10) அன்று திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் பாபு, மாவட்டப் பொருளா ளர் சத்யா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.