திருப்பூர், டிச.28- அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவ சாயிகள் விரோத சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை கண்டித்து மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழு வதும் ஒரு வார காலம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகி றது. இதன்ஒருபகுதியாக, திருப்பூர் கே.வி.ஆர் நகரில் மக்கள் சந்திப்பு இயக்கத்துடன் நடத்தப்பட்ட ஆர்ப் பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை தெற்கு மற்றும் பேரூர் நகரக்குழுக்கள் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் தெற்கு நகர செயலாளர் நாகேந்திரன், பேரூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.