கிளை நூலகத்தை செயல்படுத்த கோரிக்கை
திருப்பூர், செப்.16- பல்லடம் அருகே உள்ள கிளை நூலகத்தை செயல்படுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட நூலக அலுவலருக்கு மனு அளித்துள்ளனர். இதுகுறித்து சுக்கம்பாளையம் பகுதி கிராம மக்கள் திருப் பூர் மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பல்லடம் வட்டாரம் சுக்கம்பாளையம் கிராம ஊராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் இயங்கி வந்தது. அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள் என்று எண்ணற்றோர் இந்த நூலகத்தில் படித்து அறிவுத்தி றனை வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்க ளாக கிளை நூலகம் திறக்கப்படமல் உள்ளது. மேலும், தற்போது கிராம நிர்வாக அலுவலமாக செயல்பட்டு வருகி றது. கிளை நூலகம் இல்லாமல் மாணவர்கள், இளைஞர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, செயல்படாமல் உள்ள கிளை நூலகத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு என கூறப்பட்டுள்ளது.
திருப்பூரில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்
திருப்பூர், செப். 16 - திருப்பூர் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் சார்பாக வெள்ளி அன்று பொறியாளர் தின விழா சிறப்பாக கொண்டா டப்பட்டது. மங்கலம் சாலையில் உள்ள சிவில் இன்ஜினியர்கள் அசோ சியேசன் அலுவலகத்தில் சங்கத் தலைவர் ஜெயராமன் தலை மையில், செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. மாநில கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ் தமி ழரசன் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து, பொறி யாளர் விஸ்வேஸ்வரய்யா படத்திற்கு மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். மூத்த பொறியாளர்கள் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக பொருளாளர் மகேஷ் குமார் நன்றி கூறினார்.
காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை
திருப்பூர், செப்.16- புதிய வகை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தாராபுரம் நகராட்சி தலை வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், அதே போல தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை கூளங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்ப தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலே ரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுகள் பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும். கட்டா யமாக முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடி நீர் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி தொந்த ரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபு ரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும் இதனால் நம்மை சுற்றி உள் ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
துணை தாசில்தார்கள் நியமனம்
திருப்பூர், செப்.16- திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் முதுநிலை வரு வாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கேயம் தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த ஈஸ்வரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவி யாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக ஈ பிரிவு முது நிலை வருவாய் ஆய்வாளராக இருந்த பாலவிக்னேஷ் திருப் பூர் வடக்கு தாசில்தார் அலுவலக தலைமையிடத்துக்கு துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாள ராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனி தாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். அவினாசி மண்டல துணை தாசில்தாராக இருந்த சாந்தி மீண்டும் அதே இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வசந்தா மீண்டும் அதே இடத்திலும், மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தா ராக இருந்த வளர்மதி மீண்டும் அதே இடத்திலும், தாராபுரம் மண்டல துணை துணை தாசில்தாராக இருந்த மகேஸ்வரி மீண்டும் அதே இடத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற் கான உத்தரவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
இருசக்கர வாகனங்கள் ஏலம்
திருப்பூர், செப்.16- திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உரிமை கோரப்படாத 319 இருசக்கர வாகனங் கள் வருகிற 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு தாசில்தார் கவுரிசங்கர் தெரி வித்துள்ளதாவது, 319 இருசக்கர வாகனங்கள் வருகிற 26ஆம் தேதி காலை 11 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது. வாக னங்களை ஏலத்தில் எடுக்கும் நபர்கள் வாகனத்தின் ஏலத் தொகையில் இருந்து 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட் டையுடன் வைப்புத் தொகையாக ரூ.3 ஆயிரத்தை திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 25ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் செலுத்த வேண்டும். வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம் என தெரிவித் துள்ளார்.
திடிரென தீப்பிடித்து எரிந்த கார்
அவிநாசி, செப். 16 ஈரோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(44), சேலத்தைத் சேர்ந்த அய்ய னார்(45). இவர்கள் இருவ ரும் ஈரோட்டில் இருந்த கோவை விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ் சாலை பழங்கரை பிரிவு அருகே வரும் போது, காரின் எந்திரப் பகுதியில் திடிரென புகை உருவாகி உள்ளது. இதையறிந்த இருவரும் காரை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் கார் தீப்பி டித்து எரிந்துள்ளது. தகவலறிந்து சம்பவயி டத்துக்கு வந்த அவிநாசி தீய ணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர் இருப்பினும் தீ முழுவதும் பரவி கார் முற்றி லும் சேதமானது. இந்த விபத் தில், காரில் பயணம் செய்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அவிநாசி போலீஸார் விசா ரனை மேற்கொண்டு வரு கின்றனர்.
திருப்பூரில் பின்னலாடை நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு
திருப்பூர், செப். 16 - திருப்பூர் பின்னலாடை தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் பருத்தி நூல் விலை கிலோ வுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித் துள்ளன. பின்னலாடை தயாரிப்புக்கு அடிப்படை மூலப்பொருளாக பருத்தி நூல் இருக்கிறது. பின்னலாடை விலையை நிர்ணயிப்பதில் பருத்தி நூல் விலை முக்கியக் காரணியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை தயாரிப்புக்குப் பயன்படும் பருத்தி நூல் விலை மாதாந்திர அடிப்படை யில் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாதாந்திர நூல் விலை நிர் ணயத்தைக் கைவிடுவதாகவும், தேவையை ஒட்டி நூல் விலையை அவ்வப்போது தீர்மா னிப்பதாகவும் நூற்பாலைகள் முடிவு செய் தன. இது தொழில் துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்ப டுத்தி உள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்த னர். இதில் 10 முதல் 30ஆம் எண் கோம்ப்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7-ம், 34 ஆம் எண் கோம்ப்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5-ம் உயர்த்தப்பட்டது. இந்நிலை யில் இம்மாதத்தில் இரண்டாவது முறையாக சனியன்று நூற்பாலைகள் நூல் விலையை மீண்டும் உயர்த்தி அறிவித்துள்ளன. தற் போது நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூபாய் 5 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ 10ஆவது நம்பர் கோம்ப்டு நூல் விலை ரூ.187-க்கும், 16ஆம் நம்பர் ரூ.197-க்கும், 20ஆவது நம்பர் ரூ.255-க்கும், 24ஆவது நம்பர் ரூ.267-க்கும், 30ஆவது நம்பர் ரூ.277க் கும், 34ஆவது நம்பர் ரூ.290-க்கும், 40ஆவது நம்பர் ரூ.310-க்கும், 20ஆவது நம்பர் செமி கோம்ப்டு நூல் ரூ.247-க்கும், 24ஆவது நம்பர் ரூ.257-க்கும், 30ஆவது நம்பர் ரூ.267-க்கும், 34ஆவது நம்பர் ரூ.280-க்கும், 40ஆவது நம்பர் ரூ.300-க்கும் விற்பனை விலை நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
உடுமலை வட்டாரத்தில் கனிமவளக் கடத்தல்
திருப்பூர், செப். 16 – திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் கனிமவள கடத்தல் அமோகமாக நடைபெற்று வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க் கின்றனர். உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்கு ளம் வட்டங்களில் மாஃபியா கும்பல் தொழிற் சாலைகளுக்கு பல லட்சம் மதிப்புள்ள கனிம வளங்களை தினமும் அனுமதியின்றி கடத்துகின்றது. இது குறித்து உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் முறையிட்டனர். ஆனாலும் எந்த அதிகாரிகளும் இப்பி ரச்சனையில் நடவடிக்கை எடுப்பதில்லை. மூன்று காவல் நிலையங்களைத் தாண்டித் தான் இந்த கனிம வளங்கள் கடத்தப்படு கின்றன. காவல் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. உடுமலை வட்டம், குறிச்சிக் கோட்டை கிராமத்திலும், தம்புரான் கோயில் பகுதியி லும் அமோகமாக கனிம வள கடத்தல் நடை பெற்று வருகின்றன. சாதாரண விவசாயிகள், கூலி தொழிலா ளர்கள் தங்கள் குடியிருப்பில் கழிவறை அமைக்க விவசாய நிலத்திலிருந்து கற்கள் கொண்டு சென்றால், அபராதம் மற்றும் வாக னங்கள் சிறைபிடிக்கும் அதிகாரிகள், கோடிக் கணக்கான மதிப்புள்ள கனிம வளங்கள் கடத் தப்படுவதை தடுப்பதில்லை. இதேநிலை தொடர்ந்தால் இயற்கை வளங்களும், நிலத் தடி நீர் மட்டமும் குறைந்து விடும். எனவே இந்த கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், இப்பகுதி சுற் றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள் ளனர்.
மாணவர்கள் சமூக வலைதளங்களைத் தவிர்த்து விளையாட்டுகளுக்கு நேரம் ஒதுக்க அறிவுறுத்தல்
திருப்பூர், செப். 16 – சமூக வலைதளங்களில் நேரம் செலவிடு வதை முழுமையாகத் தவிர்த்து விளையாட் டுகளுக்கு நேரம் ஒதுக்குவதன் மூலம் மாண வர்கள் தவறான பாதைக்குச் செல்வது தவிர்க் கப்படும் என்று திருப்பூர் மாவட்ட விளையாட் டுத்துறை அலுவலர் ராஜகோபால் கூறியுள் ள்ளார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல் லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார் பில், செப்.24இல் நாட்டு நலப்பணித் திட்ட தினம் வருவதை முன்னிட்டு, மாவட்ட உள்வி ளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டி கள் நடத்தப்பட்டன. இதில் நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை ஏற்றார். மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ராஜகோபால் கலந்து கொண்டு உரையாற் றினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ் மண்ணில், தமிழர்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டு, இப்போது உலக நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது, கை-பிடி என்ற வார்த்தையே தற்போது கபடியாக மாறியுள்ளது, கபடிக்கு மறுபெயர் கபாடி, சடுகுடு, பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்ப டுகிறது. ஒவ்வொரு மாணவர்களும் சமூக வலைத ளங்களில் ஈடுபடுவதை அறவே தவிர்த்து விட்டு தங்களுக்குப் பிடித்தமான விளையாட் டுகளை விளையாடுங்கள். புதிதாக விளை யாட்டுகளை கற்றுக் கொள்ளுங்கள். தினந் தோறும் ஒவ்வொரு மாணவர்களும் விளை யாடுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண் டும் என்றார். மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, செர்லின், மதுகார்த்திக், காமராஜ் ஆகியோர் தலைமையில் கபாடி, இறகு பந்து, வளைய பந்து, சதுரங்கம், கேரம், தொடரோட்டம் போன்ற போட்டிகள் கடந்த இரண்டு நாட்க ளாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி யாக நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் களும், பரிசுகளும் செப்டம்பர் 24ஆம் தேதி வழங்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் கூறினார்.