திருப்பூர், டிச.10- 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மாமேதை லெனின் தலைமையில் தொழி லாளர்கள், விவசாயிகள் அணிசேர்ந்து நடத்திய உலகின் முதல் சோசலிச அரசை நிறுவிய மகத்தான ரஷ்யப் புரட்சியின் 106 ஆவது ஆண்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 60 ஆம் ஆண்டு துவக் கத்தை முன்னிட்டு ஞாயிறன்று திருப்பூரில் செந்தொண்டர் பேரணி நடைபெற்றது.
செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தின் துவக்கமாக கட்சியின் மாவட் டக்குழு அலுவலகமான தியாகி பழனி சாமி நிலையம் முன்பு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணி புஷ்பா பேருந்து நிறுத்தம், டவுன்ஹால் வழியாக சென்று திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே நொய்யல் பாலம் அருகில் நிறைவடைந்தது.
அங்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.உன்னிகிருஷ்ணன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தீக்கதிர் நாளேட்டிற்கான சந்தா தொகையை மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் நவம்பர் புரட்சி தினம் குறித்து பேசினர். இதில், ஆயி ரக்கணக்கானோர் சீருடை அணிந்து குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர்.
படம்: மனோஜ்