பி.ஆர்.நடராஜன் எம்.பி., நிதியில் பல்நோக்கு மையக் கட்டிட பணி தொடக்கம்
திருப்பூர், டிச.26- திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் உள்ள சீரானம் பாளையத்தில் திங்களன்று கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் வேலை தொடங்கப்பட்டது. இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பூர் நில வள வங்கி இயக்குனர் கே.ஈஸ்வரன், ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் செயலாளரும், துணைத் தலைவரும், இயக்குனர்களும் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலாளரும், ஒப்பந்ததாரரும், பொதுமக் கள் திரளானவரும் பங்கேற்ற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக் கீடு செய்து தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி தெரிவித்த பொது மக்கள், அதற்கு துணை நின்ற ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
மடத்துக்குளம் அருகே விபத்து: நான்கு பேர் பலி
உடுமலை, டிச. 26 - மடத்துக்குளம் காவல் நிலைய சரகம் நரசிங்கபுரம் செட்டி யார் மில் அருகே திங்களன்று ஆம்னி வேனும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் பரிதா பமாக உயிரிழந்தனர். மடத்துக்குளம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த சையது இப்ரா ஹிம் என்பவரின் குடும்பத்தார், திங்களன்று உடுமலை பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந் தனர். அப்போது எதிரே வந்த டாடா 407 (எண் டிஎன் 69 எம் 6397) வாகனமும் இந்த ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சையது இப்ராஹிம் குடும்பத்தி னர் பயணம் செய்த ஆம்னி வேனை ஓட்டிச் சென்ற மடத்துக் குளம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த நா.முத்து (57) மற்றும் சையது இப்ராஹிமின் தாயார் ரசீதா பேகம் (55), மனைவி ஆசிபா பானு (35), மகள் சஸ்மிதா (10), ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவரது மகன் இஸ்மாயில் (14) ஆபத்தான நிலையில் உடுமலை அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரழந்தோர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக உடு மலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆவின் முகவராக விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், டிச. 26 - திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் (ஆவின்) ஒன்றியத்தில் ஆவின் விற்பனை முகவராக விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவ தாக ஆவின் நிறுவன பொது மேலாளர் எ.பி.நடராஜன் கூறியுள் ளார். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஒன்றியங்களில் இருந்து திருப்பூர் ஒன்றியம் தனியாக பிரிக்கப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 17 முதல் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது நாளொன்றிற்கு சராசரியாக 2 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் 431 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இவை 34 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக உள்ளூர் விற்பனையாக திருப்பூர் மாவட்ட பால் நுகர்வோருக்கு விற் பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பால் கோவை, ஈரோடு மற்றும் சென்னை இணையத்திற்கு விற்பனை செய்யப்ப டுகிறது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன் றியத்தின் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து 13 ஒன்றியங்களிலும், பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய் யப்பட்டு வருகிறது. திருப்பூர் ஒன்றியத்தின் மூலம் பால் உப பொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண் ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பனீர், டெட்ரா மில்க், டிலைட் பால் மற்றும் குலோப் ஜாம் மிக்ஸ் போன்ற பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, விருப்பமுள்ள மற்றும் ஆர்வ முள்ள நபர்கள் வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி, முகவர் விண்ணப்பம் பெற்று முகவராக நியமனம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திருமதி சரண்யா மேலாளர் (விற்பனை) 90802 94484, டாக்டர் சுரேஷ் மேலாளர் (விற்பனை) 98652 54885 என்ற எண்ணில் அலுவலரை தொடர்பு கொள்ள வும் என ஆவின் பொதுமேலாளர் எ.பி.நடராஜன் தெரிவித்துள் ளார்.
திருப்பூரில் மிதமான மழை
திருப்பூர், டிச. 260 - திருப்பூர் மாநகரில் பல் வேறு பகுதிகளில் ஞாயிறு மாலை மற்றும் திங்களன்று மிதமான மழை அவ்வப் போது பெய்து வந்தது. வேலம்பாளையம், தென் னம்பாளையம், ராயபுரம், கல்லாங்காடு, ஆண்டிபா ளையம், கருவம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் பரவலாக மிதமான மழை பெய்தது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:48.91/60அடி
நீர்வரத்து:94கன அடி
வெளியேற்றம்:27கன அடி
மழையளவு:7மிமீ
அமராவதி அணை
நீர்மட்டம்: 88.72/90அடி.
நீர்வரத்து:365கனஅடி
வெளியேற்றம்:501கன அடி
மழையளவு:5மிமீ