districts

img

சுட்டெரிக்கும் வெயிலில் கோயில்வழி பேருந்து நிலையத்தில் பயணிகள் தவிப்பு

திருப்பூர், ஜூன் 13 - திருப்பூர் கோயில்வழி பேருந்து நிலையத்தில்  திங்களன்று நண்பகல் வேளையில், சுட்டெரிக் கும் வெயிலில் பயணிகள் புறநகர் பேருந்துகளைப்  பிடிக்க பரிதவிப்புடன் காத்திருந்தனர். அவர்கள் குறைந் தபட்சம் நிழலில் இளைப்பாறுவதற்கு உரிய நிழற் குடை, இருக்கை வசதி கூட செய்யப்படவில்லை. அத்துடன்  பேருந்துகள் எப்போது வரும் என்ற கால அட்டவணை பட்டிய லும் அங்கே பார்வைக்கு இல்லை. இதனால் கைக்குழந்தை களுடன் பெண்கள், முதியோர். சிறார்கள் மிகவும் சிரமப் பட்டு கொண்டிருந்தனர். நெடு நேர காத்திருப்புக்குப் பின்  அடுத்தடுத்து ஒன்றிரண்டு பேருந்துகள் வந்தபோது, பயணி கள் முண்டியடித்துக் கொண்டு பேருந்தைப் பிடிக்க குழந் தைகளுடனும், பயணப் பொருட்களுடனும் ஓடிச் சென்ற தைப் பார்க்க வேதனையாகவும், பரிதாபமாகவும் காட்சிய ளித்தது.