திருப்பூர், டிச. 26 - திருப்பூர் அருகே பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பராமரிப்பு உத வித்தொகை வழங்கக் கோரி பாதிக் கப்பட்ட நெசவாளர்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் செட்டிபா ளையம் பகுதியைச் சேர்ந்த கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் நெசவாளர்க ளுக்கு 1993ஆம் ஆண்டில் ஹட்கோ மூலம் தமிழக அரசால் வீடு கட்டி கொட்டி கொடுக்கப்பட்டது. இந்நிலை யில், தற்சமயம் அந்த வீடுகள் மிகவும் பழுதடைந்து, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொகுப்பு வீடுகளைப் பராமரிப்பு செய்ய நிதி உதவி அளிக்க வேண்டும் என பாதிக்கப் பட்ட நெசவாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித் தனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு:
திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 60 கழிவுநீர் வாகனங்கள் இயக்கப்படு கின்றன. இதன் மூலம் சுமார் 150 குடும் பங்கள் வாழ்வாதாரம் பெற்று வரக் கூடிய சூழ்நிலையில். தங்கள் வாகனங் களில் ஏற்றும் கழிவுநீரை விளைநி லங்களில் உரமாக விட்டு வருவதாக வும்,அவ்வப்போது இப்படி வெளிவி டப்படும் கழிவுநீரினால் பொதுமக்க ளுக்குப் பிரச்சனை ஏற்படுவதாகவும், எனவே கோவை, சேலம் மாநகராட்சி களில் செயல்பட்டுவரும் பொதுக்கழி வுநீர் சுத்திகரிப்பு நிலையம் போல, இங் கும் கழிவுநீர் இறக்கி விடுவதற்கு ஏற் பாடு செய்துதர வேண்டும் என.கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.