districts

img

கிராமப்பகுதியில் திரைகட்டி ஜெய்பீம் திரைப்படம் ஒளிப்பரப்பு

அவிநாசி அருகே மங்கரசோலை பாளையம்  கிராமப்பகுதி மக்களுக்கு திரைகட்டி ஜெய்பீம் திரைப்படம் வியாழனன்று காண்பிக்கப்பட்டது.    

விருத்தாசலம் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், முதனை கிராமத்தில் ராஜாகண்ணு என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவரை பொய் வழக்கில் சிக்க வைத்து காவல்துறையினர் படுகொலை செய்த வழக்கில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத்தந்தனர்.

இந்த சம்பவத்தை மையப்பொருளாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஜெய்பீம் திரைப்படம் பலதரப்பட்ட மக்களாலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.    இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் மங்கரசோலைபாளையம் பாளையம் பகுதியில் ’எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அறக்கட்டளை சார்பில் அமேசான் பிரைம் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  தீபாவளி திருநாள் அன்று அப்பகுதி பொதுமக்களுக்கு திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதனைக்கண்ட பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்தனர்.

;