districts

img

விபத்து ஏற்படுத்தும் பள்ளத்தை சீரமைக்க- சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை

அவிநாசி அருகே வஞ்சிபாளையம் மேம்பாலத்தின் கீழே உள்ள தரைமட்ட பாலத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் மேம்பாலத்தின் கீழே சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பாக தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவ்வழியாக கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றது. இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு தரைமட்ட பாலம் இடிந்து பெருமளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இவ்வழியாக இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகின்றது. தற்காலிகமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளத்தின் மேலே பெரிய கற்களை வைத்து மூடி வைத்துள்ளனர்.

இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர்  முத்துச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.