districts

img

திருப்பூரில் மாணவர், வாலிபர் சங்க அலுவலகங்கள் திறப்பு

திருப்பூர், ஜூன் 10- மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கங்களின் புதுப்பிக்கப் பட்ட திருப்பூர் மாவட்டக்குழு அலு வலகங்கள் திறப்பு நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டக்குழு அலுவல கங்கள் திறப்பு நிகழ்ச்சி திங்களன்று மாலை நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சா.பிரவீன்குமார் வரவேற்றார். மாணவர் சங்க கொடியை சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, வாலிபர் சங்க கொடியை சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதைத்தொடர்ந்து அலுவலக கட்டிடத்தை வாலிபர் சங்க அகில இந்திய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஏ.ரஹீம் திறந்து வைத்தார். தலைவர்கள் உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், கட்சி அலுவலகத்தை சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, கூட்ட அரங்கை வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாணவர் சங்க அலுவலகத்தை மாநிலச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, வாலிபர் சங்க அலுவலகத்தை மாநிலத்  தலைவர் எஸ்.கார்த்திக் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனிடையே, அவிநாசி அதிர்வுகள் கலைக்குழு சார்பில் தப்பாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்வில், மாணவர் மற்றும் வாலிபர் சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.