districts

img

ரயில்வே கேட்டில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர், ஜூலை 18 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள முதல் ரெயில்வே கேட் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிர மத்திற்கு உள்ளாகின்றனர்.

திருப்பூரில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவ தால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கி றது. இந்நிலையில், ஊத்துக்குளி செல் லும் சாலையில் அமைந்துள்ள முதல் ரயில்வே கேட் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும்  சிரமத்திற்கு ஆளாகினர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், ஒத்தக்கண் பாலம் என அழைக் கப்படும் இந்த முதல் ரயில்வே கேட்  வழியாகத்தான், கொங்கு மெயின் ரோடு, என்.ஆர்.கே.நகர், எம்.எஸ்.நகர்,  கோல்டன் நகர் உள்ளிட்ட பகுதிக ளுக்குச் செல்ல வேண்டும். மேலும், இப் பகுதியில் உள்ள சின்னசாமி அம்மாள்  அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு,  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான மாணவர்கள் இந்த ரயில்வே  கேட் வழியாக தான் வந்து செல்கின்ற னர். திருப்பூர் நகர் பகுதிகளில் வேலை  செய்யும் தொழிலாளர்கள், பொதுமக் கள் என தினந்தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் பயன்படுத்தும் இந்த வழி யில் சிறிய அளவில் மழை பெய்தாலே  மழைநீருடன் கழிவுநீர் பாலத்தின் அடி யில் தேங்கிவிடுகிறது. 

இதனால் இவ்வழியைப் பயன்படுத் துபவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும்  ஆபத்து உள்ளது. ஒவ்வொரு முறை கழிவு நீர் தேங்கி நிற்கும் போதும் மாந கராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கிறோம். அவர்களும் நடவ டிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் நிரந்தரத்தீர்வு ஏற்படுவ தில்லை. சாக்கடை நீர் வெளியேறுவ தற்கான கழிவுநீர் வடிகால் இல்லா ததே இதற்கு காரணம். எனவே மாநக ராட்சி நிர்வாகம் முறையாக கழிவுநீர்  வடிகால் அமைத்தால் மட்டுமே நிரந்தர  தீர்வு ஏற்படும் என தெரிவித்தனர்.