திருப்பூர், மே 14 - திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் தனது அலுவலகத்துக்கு நிர்வாண நிலை யில் இருந்த அகோரிகளை அழைத்து வந்து பூஜை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மாவட்ட காவல் துறை யில் புகார் அளித்துள்ளனர். காங்கேயம் நகராட்சி ஆணையராக செயல்பட்டு வரு பவர் வெங்கடேஸ்வரன். காங்கேயம் 2ஆவது வார்டு பாஜக பொறுப்பாளர் அசோக், 2ஆவது வார்டு திமுக பொறுப் பாளர் சரவணன் இருவரும் நண்பர்கள் எனக் கூறப்படு கிறது. கடந்த ஏப்ரல் மாதம் காசியில் இருந்து ராமேஸ் வரம் சென்று கொண்டிருந்த இரு அகோரிகளை அசோக்கும், சரவணனும் ஏப்ரல் 13 ஆம் தேதியன்று காங்கேயம் நக ராட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். நகராட்சி அலுவலகத்துக்குள் இரண்டு அகோரிகள் நிர்வா ணமாக வருவதைக் கண்ட பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த பெண்கள் அலுவலகத்தின் மேல் தளத்துக்கு சென்றுவிட்டனர். அந்த அகோரிகளை ஆணையரின் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று பூஜை நடத்தி, அவரிடம் ஆணையர் வெங்கடேஸ்வரன் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆசி பெற்றதாகக் கூறப்படு கிறது.
நகராட்சி அலுவலகத்தை விட்டு அகோரிகள் சென்ற பின்னர் பெண் ஊழியர்கள் மேல் தளத்தில் இருந்து கீழே வந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் காங்கேயம் நக ராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், ஆணை யரின் அனுமதியுடன் நிர்வாண நிலையில் இருந்த அகோரி களை அழைத்து பூஜை செய்தது ஒரு மாதம் ஆன நிலை யில் தற்போது ஊடகங்களின் மூலம் ஒளிபரப்பப்பட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அதன் மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமையில் சனியன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர். அரசியல் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின் மைக்கு எதிராக அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தியது சட்டப்படி குற்றமாகும். இத்துடன் தமிழ்நாடு அரசு ஆணைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் நடைபெற்றுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்து ஆட்சி செய்யும் திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே, இதில் தொடர் புடைய அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள் ளனர்.