districts

ரூ.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ருப்பூர், ஏப்.22-

வெள்ளக்கோவிலில் ரூ.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு தாராபுரம், காங்கேயம், வாணியம் பாடி, விளாத்திகுளம், பழனி ஆகிய விவசாயிகள் 145 பேர், 48 ஆயிரம் கிலோ எடை கொண்ட 941 தேங்காய் பருப்பு மூட்டை களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தினர்.

விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் முன்னிலையில் முத்தூர், வெள்ளக்கோவில், காங்கேயம், மூலனூர் பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 16 பேர் ஏலத்தில் கலந்து கொண் டனர்.இதில், முதல்தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.128.35 க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.83 க்கும் ஏலம்  நடந்தது. மொத்தம் ரு55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது.

;