districts

img

பாம்பு கடித்த குழந்தைக்கு உயர் சிகிச்சை உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவமனை

திருப்பூர், ஜூலை 16 - திருப்பூரில் பாம்பு கடித்து தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை அரசு  மருத்துவமனையில் சேர்த்து  தீவிர சிகிச்சை அளித்து உயி ரைக் காப்பாற்றினர்.

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேதியப்பன். இவரது  மூன்று வயது மகள் உதயஶ்ரீ. இந்த குழந்தையின் இடது ஆள்காட்டி விரலில் விஷப்பாம்பு கடித் துவிட்டது. இந்த குழந்தையை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். எனினும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்த குழந் தையை தனியார் மருத்துவமனையில் இருந்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 8ஆம் தேதிஅன்று அதிகாலை  அனுப்பி வைத்தனர். குழந்தையின் நாடித்து டிப்பு மற்றும் சுவாசம் குறைந்து உயிருக்கு போராடும் நிலையில் உத யஶ்ரீயை அரசு மருத்துவர் கள், குழந்தைகள் தீவிர  சிகிச்சை பிரிவுக்கு மாற்றி னர். அங்கு மருத்துவக் குழு வினர் முழு நேரக் கண்கா ணிப்பில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

வெண்டிலேட்டர் எனும்  செயற்கை சுவாசம் பொருத்தி, உடனடியாக  பாம்பு விஷ முறிவு மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் செலுத்தி உரிய சிகிச்சை அளித்த னர். இந்த நிலையில் குழந்தையின் உடல்  நிலை நல்ல நிலையில் தேறியது. இதைய டுத்து  உணவு அருந்தும் நிலையில்  திங்க ளன்று (ஜூலை 15) குழந்தை உதயஸ்ரீயை அவ ரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.  உயிரை மீட்டுத் தந்த அரசு மருத்துவர்க ளுக்கு மனநெகிழ்வுடன் நன்றி தெரிவித்து,  குழந்தை உதயஸ்ரீயை பெற்றோர் மகிழ்ச்சியு டன் அழைத்துச் சென்றனர்.