districts

img

ஏலகிரிமலை சாலை வளைவில் மண் அரிப்பு

ஜோலார்பேட்டை, அக். 12- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பேட்டை ஒன்றியத்திற்குட் பட்ட ஏலகிரி மலை உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமான ஏல கிரி மலையில் மலைப்பாதை ஏறும் பொழுது 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 10ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதடைந்தும், சாலையின் அடிப்பகுதியில் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும் பொழுது சாலையில் அதிர்வுகள் ஏற்படு கிறது. கனரக வாகனங்கள் சென்றால் சாலை சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்தால் மண் அரித்து சாலை சரியும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, அசம்பாவிதம் நடைபெறும் முன் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.