districts

img

திருப்பத்தூர் மலை மக்களுக்கு சாதி சான்று வழங்க கோரிக்கை

திருப்பத்தூர், பிப். 4- திருப்பத்தூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு, மாநிலத் துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், முன்னாள் தலைவர் லட்சுமண ராஜா, சங்கத்தின் தலைவர் மனோகர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் விவசாயிகள் சங்க செயலாளர் சக்திவேல், சிபிஎம் தாலுகா செயலாளர் காசி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏலகிரி மலை முத்தனூர் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், அனைத்து மலைவாழ் மக்க ளுக்கு சாதிச் சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.