districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி திருப்பத்தூர் நகரை தூய்மைப்படுத்தும் நகராட்சி

திருப்பத்தூர், டிச.6- திருப்பத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணிகள் முறையாக  நடைபெறாததால் குப்பைகள் தேங்கியதை கண்டித்து மார்க்சியஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஜாபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதுகுறித்து தீக்கதிரில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகம் பெரியார் நகர் மின் மயானத்தில் குவிந்த குப்பைகளை அகற்றி போக்கு வரத்திற்கும் வசதி செய்து கொடுத்துள்ளது. இதேபோன்று நகராட்சி முழுவதும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

;