districts

ஆளுநரை பதவியில் இருந்து ஒன்றிய அரசு நீக்க வேண்டும்: வைகோ

திருநெல்வேலி, ஜன.12- மதி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லை ரெட்டியார்பட்டியில் செய்தியா ளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக அரசியல் வரலாற்றில் இது வரை நடக்காத அநீதியை ஆளுநர் மாளிகை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆளுநர் சட்ட மன்றத்தில் நடந்துகொண்ட முறை இது வரை எந்த மாநிலத்திலும் எந்த ஆளுநரும் நடத்தாத ஒன்று. ஆளுநர் அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை  உடனே வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு  அரசின் கொள்கைகள், சாதனைகளை மக்க ளுக்கு அறிவிக்கும் உரை தான் ஆளுநர்  உரை. அப்படிப்பட்ட உரையை வாசிக்கா மல் அவராகவே சிலவற்றை சேர்த்து வாசித்து விட்டு அந்த உரைக்கு ஏற்கனவே மறுப்பு தெரிவித்ததாக அபாண்டமான பொய்யை ஆளுநர் வட்டாரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் இருந்து அவர் வெளி யேற்றப்பட வேண்டும். ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் மத்திய அரசும் ஆளுநரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருக்கிறது என்று அர்த்தம். இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 212-ன் படி சட்டமன்ற நட வடிக்கையில் நீதிமன்றமே தலைமுடியாது என நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஆனால் ஆளுநர் ,சட்டமன்றத்தில் கொண்டு வந்த 21 மசோதாக்களில் கையெழுத்து போடாமல் உள்ளார்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டுமென்று பலர் கூறு கின்றனர். 40 பேர் இதுவரை உயிரிழந்துள் ளனர். நேற்று கூட நெல்லை பணகுடியில் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந் துள்ளார். ஆனால் அதை தடை செய்யும் மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாமல் ஆன்லைன் ரம்மி நடத்து பவர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுக்கிறார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் மிக பண்பாக நடந்து கொண்டார். ஆனால் அதை  மதிக்காமல் ஆளுநர் நாட்டுப்பண் முடி வதற்கு முன்பே அவையிலிருந்து வெளி யேறினார். ஆர். எஸ். எஸ். சங்பரிவாரின் கருவியாக ஆளுநர் செயல்பட்டு கொண்டி ருக்கிறார்.  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அண்ணா பிறந்தநாளில் சேது சமுத்திரம் திட்டத்தை அறிவிக்க வைத்தேன். அதன்  பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள் ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தீர்மா னம் சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார் கள் என்றால் அதைவிட தித்திப்பான செய்தி எதுவும் இல்லை. எனவே முதலமைச்சரை மனதார பாராட்டுகிறேன். தமிழக பிரதிநிதி கள் ஆளுநரை மாற்றக் கோரி குடியரசுத் தலைவரை சந்தித்திருப்பதால் நியாயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆளு நரை மத்திய அரசு இயக்கிக் கொண்டிருக் கும் காலகட்டத்தில் நியாயம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

;