சென்னை, ஆக. 5 - திருநெல்வேலி மாநகராட்சி மேயராக எம். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இதற்கான மறைமுகத் தேர்தலில் 54 கவுன்சிலர்கள் வாக்களித்த நிலை யில், அதில் 30 வாக்குகளை எம். ராம கிருஷ்ணன் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
திருநெல்வேலி மேயராக இருந்த பி.எம். சரவணன், கடந்த ஜூலை 3-ஆம் தேதி தமது மேயர் பதவிகளை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல், திங்களன்று (ஆகஸ்ட் 5) நடை பெற்றது.
இதில், திமுக சார்பில் 25-ஆவது வார்டு கவுன்சிலர் எம். ராமகிருஷ்ணன், திங்களன்று காலை சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக-வின் அதிருப்தி வேட்பாளராக 6-ஆவது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜூம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில், 54 பேர் மறைமுக தேர்தலில் வாக்களித்தனர். இதையடுத்து நடைபெற்ற தேர்தலில், திமுக வேட்பா ளர் எம். ராமகிருஷ்ணன் 30 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். திமுக அதிருப்தி வேட்பாளர் பவுல்ராஜ் 23 வாக்குகளைப் பெற்றார். அதிமுக கவுன்சிலர்களில் ஜெக நாதன் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஒரு வாக்கு செல்லாத வாக்கானது.
55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகராட்சியில் திமுகவுக்கு 44 கவுன்சிலர் களும், கூட்டணிக் கட்சிகளுக்கு 7 கவுன் சிலர்களுமாக மொத்தம் 51 கவுன்சிலர் களும், அதிமுகவுக்கு கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர். இந்நிலையில், திமுக அதிகாரப் பூர்வ வேட்பாளர் 30 வாக்குகளும், அதிருப்தி வேட்பாளர் 23 வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிருப்தி வேட்பாளர் பவுல்ராஜின் வேட்பு மனுவை, திமுக 4-வது வார்டு வசந்தா முன்மொழிய, மதிமுக கவுன்சிலரான சங்கீதா வழிமொழிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.