districts

குடியரசு தின விடுமுறை தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு

திருநெல்வேலி, ஜன.22- குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வச திக்காக சென்னையில் இருந்து தென்  மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை  இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்  ளது. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) தாம்பரத்தில் இருந்து  வருகிற 25-ந்தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு  நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க் கத்தில் (06054) வருகிற 29-ந்தேதி நாகர்  கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச் சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய  ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இதில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன்  கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்  டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்  திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும். தாம்பரம் -நெல்லை சிறப்பு கட்டண  ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து வருகிற  26-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்ற டைகிறது.

மறுமார்க்கத்தில் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறு நாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை  எழும்பூர் சென்றடைகிறது. இந்த ரயில் களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன  மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்ற டுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி கள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி கள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன் படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களி லும் நின்று செல்லும். இந்த ரயில் களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்  றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி யது. தொடக்கம் முதலே டிக்கெட் முன் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.