districts

நெல்லை - திருமங்கலம் இடையே 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி

திருநெல்வேலி ,ஏப் .5- நெல்லை - திருமங்கலம் இடையே 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கிட தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி யுள்ளது. தென்மாவட்டங்களில் மதுரைக்கு தெற்கே இரட்டை ரயில்பாதை பணிகள் 3 கட்டமாக நடந்து வருகிறது. இதில் முதற் கட்டமாக மதுரை முதல் நெல்லை வரை யிலான பணிகள் நிறைவு பெற்று விட்டன.  நெல்லை முதல் திருவனந்த புரம் வரையி லும், வாஞ்சி மணியாச்சி தொடங்கி தூத்துக்குடி வரையிலான பாதையிலும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. திருமங்கலம் தொடங்கி நெல்லை வரை யிலான இரட்டை ரயில் பாதை பணிகள் கடந்த மாதமே நிறைவு பெற்றுவிட்ட நிலை யில், பெங்களூரில் இருந்து பாதுகாப்பு ஆணையர் அதை ஆய்வு செய்துவிட்டு சென்றார். இந்நிலையில் தற்போது திருமங்க லம் தொடங்கி நெல்லை வரையிலான இரட்டை ரயில் பாதையில் 110 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம் என தெற்கு ரயில்வே அனுமதி சான் றிதழ் வழங்கி யுள்ளது. 139 கிமீ தூரம் கொண்ட இவ்வழித்தடத்தில் வாஞ்சி மணி யாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், துலுக்கர்பட்டி, விருதுநகர், கள்ளிக்குடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில் ஏற்கனவே ரயில்கள் 90 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு வந்தன. ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு சான்று, டிராக் சான்று மற்றும் வேக சான்றிதழ் வழங்கி விட்ட நிலையில், தென்மாவட்ட ரயில் களை நெல்லை முதல் மதுரை வரை வேக மாக இயக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் கால அட்டவணை மாற் றப்பட்டால் மட்டுமே ரயில்கள் வேக மாக இயக்க முடியும் என அதிகாரிகள் தெரி வித்தனர். விரைவில் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் அட்ட வணை மாற்றப்பட்டு விரைந்து இயக்கப் படும் என தெரிகிறது.