பாபநாசம், மே 22- பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கபிஸ்தலத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாபநாசம் வடக்கு ஒன்றியச் செயலாளர் தாமரைச் செல்வன் தலைமை வகித்தார். கபிஸ்தலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி வரவேற்றார். மாவட்டப் பிரதிநிதிகள் பிரபாகரன், சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் மதுரை சுந்தர்ராஜன், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாண சுந்தரம் பேசினர். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், கும்பகோணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அசோக் குமார், மாவட்ட துணைச் செயலாளர் அய்யா ராசு உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.