districts

தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை

பாபநாசம், ஜன.17- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவ ரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரு மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந் துள்ள அரசு கூர்நோக்கு மற்றும் சிறப்பு இல்லத்தில் 17 வயது மதிக்கத்தக்க கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் சில நாட்களுக்கு  முன் சந்தேகத்திற்கிடமான வகையில் உயி ரிழந்திருப்பதும் பெரும் அதிர்ச்சியை அளிக்  கிறது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இதில் தலையிட்டு இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வரவேற்கிறேன். இங்கு நடந்த கொலை சம்பவம், சிறார் நீதி நடைமுறையில்  (Administration of Juvenile Justice) இருக்கக் கூடிய இடைவெளிகளை வெளிச்  சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சர்வதேச சிறார் நீதி பரிபாலன முறை யானது, “வழிதவறும் குழந்தைகளைத் தண்டனைக்கு உட்படுத்தி அவர்களை பெரும் குற்றவாளிகளாக மாற்றி விடாமல், அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் மறு உள்ளிணைப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்துகிறது. இதன்  அடிப்படையில்தான் சிறார் நீதி (குழந்தை களுக்கான அக்கறை மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015  கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தினை நடை முறைப்படுத்தும் பொறுப்பில் இருக்கக்  கூடிய அலுவலர்களும் பொறுப்பா ளர்களும், இந்த அடிப்படையைப் புரிந்து  கொள்ளாமல், கூர்நோக்கு இல்லங்களி லும் சிறப்பு இல்லங்களிலும் தவறிழைத்து விட்டு வரக்கூடிய குழந்தைகளை குற்ற வாளிகள் போல் நடத்துவது, மனிதாபிமான மற்ற முறையில் நடத்துவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதை காண முடிகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது கோகுல்ஸ்ரீயை கொன்றது மட்டுமல்லாமல்,  அவரது தாயார் ப்ரியா, உண்மையை பேசி  விடக்கூடாது என்பதற்காக, அவரை அடைத்து வைத்து மிரட்டி இந்த சம்ப வத்தை மறைக்க முயன்று உள்ளனர். இந்த  வழக்கை உடனடியாக, மாவட்ட நீதிபதி யின் கண்காணிப்பில், சமூகப் பணியா ளர்கள் மற்றும் குழந்தை உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு டன்கூடிய ஒரு குழுவை அமைத்து ஒப்ப டைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனை வரும் கைது செய்யப்பட்டு, அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து, குற்ற நட வடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்.  தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய  கூர்நோக்கு மற்றும் சிறப்பு இல்லங்கள் உட னடியாக சமூக தணிக்கைக்கு உட் படுத்தப்பட வேண்டும். தற்போது பணி யில் உள்ள அனைத்து அலுவலர்களை யும் பணியாளர்களையும் ஒட்டுமொத்த மாக வேறு அமைச்சுப் பணிகளுக்கு மாற்ற  வேண்டும். சிறார் கூர்நோக்கு இல்லங்க ளில், குழந்தைநேய மனப்பான்மை மற்றும் தகுதியுள்ள நபர்களை நியமிக்க வேண் டும். பாதிக்கப்பட்ட கோகுல்ஸ்ரீயின் குடும் பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு  வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.