திருநெல்வேலி, மே 29- பெட்ரோல் டீசல் விலை உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுத் துறை களில் உள்ள காலி பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியு றுத்தி சிபிஎம், சிபிஐ, சிபிஐஎம்எல், விசிக சார்பில் வீரவநல்லூரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.பி.எம் சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி யம் தலைமை தாங்கினார். சி.பி.ஐ ஒன்றிய செயலா ளர் குமார் , விசிக ஒன்றிய செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார்கள், சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.