districts

இலை கருகல் நோயால் 5 ஆயிரம் ஏக்கரில் வாழை பாதிப்பு களக்காடு விவசாயிகள் கவலை

திருநெல்வேலி, டிச.25-  களக்காடு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்  பயிரிடப்பட்டுள்ள வாழைகளை இலை கரு கல் நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியில் முக்கிய தொழி லாக விவசாயம் உள்ளது. ஆண்டுதோறும் ஆயி ரக்கணக்கான ஏக்கர் பரப்பள வில் நெல்,  வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.  நெல் சாகுபடி செய்வதை விட பணப்பயி ரான வாழைகள் சாகுபடி செய் வதையே விவசாயிகள் அதிகம் விரும்புகின்றனர். களக்காடு பகுதியில் விளையும் வாழைத் தார்களுக்கு கேரள பகுதிகளில் தனி கிராக்கி உள்ளது. இங்கு விளையும்  ஏத்தன் ரக வாழைகள் சிப்ஸ் தயாரிக்க வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது. இந்தாண்டும் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்தனர். தற்போது நடவு செய்யப்  பட்டு 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், வாழைகளை இலை கரு கல் நோய் (பழுப்பு  நோய்) தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்  கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடு கிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. இலை கருகல் நோயினால்  வாழைத்தார்கள் திரட்சியாக இருக்காது என்றும் மகசூல் பாதிக்கும் என்றும் விவ சாயிகள் கூறுகின்றனர். களக்காடு சாலைப்  புதூர், மாவடி திருக்குறுங்குடி, மலையடி புதூர் மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர்  செய்யப்பட்டுள்ள பல லட்சம் வாழைகள், இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் ரசாயன உரங்களால் நோய் தாக்கு தல் ஏற்பட்டுள்ளதா? அல்லது மண் பாதிப்  பால் இலை கருகல் நோய் ஏற்பட்டுள் ளதா? இலை கருகல் நோய் தாக்க கார ணம் என்ன என்பது தெரியாமல் விவசாயி கள் குழப்பம் அடைந்துள்ள னர். இதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்து களை வாங்கி வாழைகளுக்கு தெளித்தும் நோய் கட்டுக்குள் வர வில்லை என்றும் விவ சாயிகள் கூறுகின்றனர்.