திருநெல்வேலி, மே 13 - நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய கொலைவெறித் தாக்கு தலையும் தாண்டி, பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாண வர் சின்னத்துரை பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், பாளை யங்கோட்டை சரோஜ் நினை வகத்தில், மாணவர் சின்னத் துரைக்கு தனியாக ஒரு பாராட்டு விழாவையே ஏற்பாடு செய்த இந்திய மாணவர் சங்கம், இந்த விழாவில், மாணவர் சின்னத்துரை, அவரது சகோ தரி சந்திரா செல்வி, தாயார் அம்பிகா ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டியது.
விழாவிற்கு எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் சை லேஸ் அருள்ராஜ் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் இ. சஞ்சய் வரவேற்றார். தீண்டா மை ஓழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் பி. சுகந்தி, தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, எஸ்எப்ஐ மாநிலத் தலைவர் தௌ. சம்ஷீர் அகமது ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.
எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கற்பகம், எல்ஐசி ஊழியர் சங்க கோட்டத் தலைவர் செ.முத்துக்குமாரசாமி, சிஐ டியு மாவட்டத் தலைவர் பீர்முகம்மது ஷா, குமார சாமி, எம். சுடலைராஜ் உள்ளிட்ட பலர் பேசினர். எஸ்எப்ஐ மாவட்ட துணைத் தலைவர் ராஜசெல்வம் நன்றி கூறினார்.
பாளையங்கோட்டை யில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் பி. கற்பகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, பிரேமா, சாலியா பீவி, ராமலட்சுமி, மாலதி, பிரமு, கோமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டி னர்.