districts

img

39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்

திருநெல்வேலி, பிப்.20- சாதகமான தொகுதிகள், பாதக மான தொகுதிகள் என்று எதுவும் இல்லை. 39 தொகு திகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று மதி முக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். திருநெல்வேலியில் அவர் செய்தி யாளர்களிடம் மேலும் கூறியிருப்ப தாவது:-  

ஒவ்வொரு இயக்கத்திற்கும் தனிச் சின்னம் உண்டு. அந்த சின்னத்தில் போட்டியிடத் தான் அந்தக் கட்சியினர் விரும்புவர். தற்போது நாங்கள் பம்ப ரச் சின்னத்தை இழந்துவிட்டோம். புதி தாக சின்னம் கிடைத்தால் அந்தச் சின்  னத்தை வாக்காளர்களிடையே கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படும்.

எனவேதான் அந்தந்த கட்சிகள் அவர்களுக்குரிய சின்னத்தில் போட்டி யிட விரும்புகின்றன. இந்தக் கோரிக்கை குறித்து தமிழக முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். புதிய சின்னத்தால் தோல்வி ஏற்பட் டால், அது இந்தியா கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கும். இவ்வாறு துரை வைகோ கூறி யுள்ளார். எந்தெந்த தொகுதிகளில் போட்டி யிடுவீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “முதலில் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

பின் னர், போட்டியிடும் தொகுதிகள் முடிவு  செய்யப்படும்” என்றதுடன், தமிழ கத்தில் சாதகமான தொகுதிகள், பாத கமான தொகுதிகள் என்று ஏது மில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னின் செயல்பாட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும்” என்றார்.