districts

img

வரலாறு காணாத பாதிப்பைச் சந்தித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்

திருநெல்வேலி,டிச.18-  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெய்த அதி கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பை சந்தித்துள்ளன.

முன்னெச்சரிக்கையாக நெல்லை  மாவட்ட அணைகள் திறக்கப்பட்ட நிலை யில் அதனுடன் காட்டாற்று வெள்ளம், குளங்களில் இருந்து வெளியேறும் நீர், மழை நீர் என அனைத்தும் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான வெள்ளம் பெருக் கெடுத்து, கரையோரப் பகுதி களுக்குள் புகுந்தது.

குறிப்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆட்சியர் அலுவல கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளநீர் காரணமாக பாளையங்கோட்டை தாலுகா அலு வலகத்திலும் ஆவணங்கள் சேத மடைந்தன.

நெல்லை பெரியார் பேருந்து நிலை யம் மற்றும் ரயில் நிலையங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, பேருந்தே மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்ததால், பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வண் ணாரப்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப் பாலம் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில், போக்குவரத்து முற்றிலு மாக தடை செய்யப்பட்டது. 

ஆட்சியர் அலுவலகம், கொக்கிரகு ளம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி யவர்களை படகுமூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை சந்தி ப்பு சிந்துபூந்துறை, மேகலிங்கபுரம், உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் மின்கோபுரங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உரு வாகியுள்ளது. அவர்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் கனமழையால் சிவகுமார் என்பவர் வீடு  இடிந்து விழுந்துள்ளது. கட்டட ஈடுபாடு களில் சிக்கிய சிவகுமாரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அதே போல் மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியில் பட்டத்தி என்ற 75 வயதான மூதாட்டி வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
 

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர், ஆத்தூர், ஏரல், திருச்செந்தூர், காயல்பட்டி னம், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரபட்டினம், ஸ்பிக் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

கோரம்பள்ளம் ஏரி கனமழையால் முழுமை யாக நிரம்பிய நிலையில், ஏரியின் ஒரு பக்கக் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதேபோல ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாயும் நிலையில், அந்த தண்ணீர் வெளியேறி மதுரை - தூத்துக்குடி நான்குவழிச் சாலையை சூழ்ந்துள்ளது. நீராவி தெப்பம் நிரம்பி மறுகால் பாய்ந்ததால், எட்டயபுரத்தில் இருந்து நாவ லக்கம்பட்டி, வீரப்பட்டி கருப்பூர், மலைப்பட்டி செல்லும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி யது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருவைகுண்டத்தில் திருநெல்வேலி - தூத்துக்குடியை இணைக்கும் ரயில் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பழுதாகி உள்ளது. தூத்துக்குடி செய்துங்கநல்லூர் அருகே ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே இருந்த கற்கள், தரைப்பகுதி என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த வழித் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பிரதான சாலை களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் திருச்செந்தூரில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக மின்சாரம் இணைப்பு, தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டதுடன், வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பலர் மொட்டை மாடியில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் தனித்தீவாக மாறியுள்ளது.

தொடர்மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடி அணையில் இருந்து வைப்பாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏற்கெனவே வைப்பாற்றில் அதிகளவு தண்ணீர்  சென்று கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விளாத்திகுளம் வைப்பாற்றில் நீண்ட வருடங் களுக்கு பின்பு, வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடுவதால், மீரான் பாளையம் தெருவில் உள்ள வீடுகளையும், விபூசனூர், அயன்செங்கல்படை, கே. துரைச்சாமிபுரம், ஓ.  லட்சுமி நாராயணபுரம், நூத்தலக்கரை, நாகலா புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

வைப்பாற்றுக் கரையில் உள்ள கமலாபுரம் ஊராட்சி சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள வீடு களை வெள்ளம் சூழ்ந்த நிலையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உடனடியாக அங்குள்ள மக்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தங்க வைத்துள்ளனர். 

வைப்பாற்றுக் கரையில் உள்ள கமலாபுரம் ஊராட்சி சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள வீடு களை வெள்ளம் சூழ்ந்த நிலையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உடனடியாக அங்குள்ள மக்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தங்க வைத்துள்ளனர். 

இந்த கனமழை காரணமாக, கோவில்பட்டி வழியாக சென்ற சென்னை தூத்துக்குடி முத்து நகர் விரைவு ரயில், நிஜாமுதீன் விரைவு ரயில் ஆகியவை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். வட்டாட்சியர் லெனின், டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான அதி காரிகள் விரைந்து வந்து அவர்களுக்கு தேவை யான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.