districts

யானையால் சேதமான பயிர்

திருநெல்வேலி டிச 31- திருநெல்வேலி மாவட்டம் விக்கரமசிங்கபுரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனவன் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் தென்னை பயிரிட்டு வருகின்றனர். டானா பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் மாவடி விளை பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் நெல் பயி ரிட்டுள்ளார். அவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை நெற்பயிர் வழியாக நடந்து சென்று அங்குள்ள பனை மரத்தை பிடுங்க முயற்சி செய்துள்ளது. இதில் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. டேனிசேவியர் (23) என்பவரின் தோட்டத்தில் புகுந்த மிளாக்கள் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை சேதப்படுத்தி உள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து கீழே இறங்குவதைத் தடுக்க வனத்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.