திருநெல்வேலி, டிச. 6- நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாண வர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு, இந்த பள்ளியில் நோட்டு புத்தகத்தை மறைத்து வைத்தது தொடர்பாக பிளஸ் டூ மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது இரு தரப்பு மோதலாக வெடித்துள்ளது. இதை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும் மோதலில் ஈடு பட்ட மாணவனிடம் பெற்றோரை அழைத்து வரும்படி அவர் கூறியுள்ளார். இதனால் அந்த மாணவன் செவ்வா யன்று பள்ளிக்கு கத்தியுடன் வந்ததுடன் மற்றொரு தரப்பு மாணவரின் முதுகில் குத்தி உள்ளார். இதில் படு காயமடைந்த மாணவன், களக்காட்டில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங் கோட்டை அரசு மருத்துவமனையில் அந்த மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தவுள்ளார்.