districts

img

‘வள்ளலார் 200; வைக்கம் 100’: தமுஎகச கருத்தரங்கம்

கும்பகோணம், அக்.29- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்க கும்பகோணம் கிளை சார்பில் ‘வள்ளலார் 200; வைக்கம்  100’ கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாநகரத் தலை வர் மா. கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் அசோக் குமார் வரவேற்றார். மாவட்டத் தலை வர் சா.ஜீவபாரதி, மாவட்டச் செயலா ளர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். மாநில துணைச் செயலாளர்  களப்பிரன் ‘கண்மூடி பழக்கமெல் லாம்’ என்ற தலைப்பில் வள்ளலார் குறித் தும், மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா ‘பெரியோரெல்லாம் பெரி யார் அல்ல’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் குறித்தும் கருத்துரை ஆற்றி னர். கவிஞர் கண்ணதாசன், கவிஞர் சுதா  ஆகியோரின் கவித்தூரலும், நடனம், நாடகம் இசையுடன் பள்ளிக் குழந்தைகள் பெரியார், வள்ளலார் வேடம் அணிந்த கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. மாநகரப் பொருளாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.