திருச்சிராப்பள்ளி, ஜூன் 12 -
திருச்சி திருவெறும்பூர் இந்திய ஜனநா யக வாலிபர் ரத்ததான கழகமும் திருச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து ஞாயிறன்று திருவெறும்பூரில் ரத்ததான முகாம் நடத்தின.
முகாமில் ஏராளமான இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமை திருச்சிராப் பள்ளி மாநகராட்சி துணை மேயர் த.திவ்யா, திருச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலு வலர் டாக்டர் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர். பகுதி செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலா ளர் யுவராஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, வாலிபர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் கோவி.வெற்றிச்செல்வன், மாதர் சங்க ரேணுகா, சாந்தி, திரையரங்க உரிமை யாளர் முருகன், சிபிஎம் பகுதி செயலாளர் மணிமாறன், வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் பா.லெனின், மாவட்ட செயலாளர் சேது பதி, மாவட்ட பொருளாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.