districts

img

கல்விக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி வாலிபர் சங்கம் சாலை மறியல்

திருவாரூர், ஜூலை 30 - குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  சார்பில் காலிக் குடங்களுடன் செவ்வா யன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. திருவாரூர் மாவட்டம், வலங்கை மான் ஒன்றியம் மாணிக்கமங்கலம் ஊராட்சி, சிவபுரி கல்விக்குடி கிராமத் தில் குடிநீர் பிரச்சனையையொட்டி, கடந்த ஜூலை 19 அன்று பேச்சு  வார்த்தை நடைபெற்றது. இதில் ஒரு வாரத்தில் குடிநீர் பிரச்சனையை சரி செய்வதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சரிசெய்யப்பட வில்லை.  இதைக் கண்டித்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் மற்றும் பொது மக்கள் சார்பில் செவ்வாயன்று வலங் கைமான் - நீடாமங்கலம் சாலையில் உள்ள நரிக்குடி பகுதியில் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  அதிகாரிகள், தற்காலிகமாக அமைக் கப்பட்டுள்ள போரின் ஆழத்தை அதி கரித்து, மினி டேங்க் அமைத்து தட்டுப் பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு முன்மொழிவு கள் அனுப்பி வைக்கப்படும். ராமப்பா தோட்டம் பகுதியில் வறட்சி  நிவாரண நிதியிலிருந்து புதிய ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு, மாணிக்கமங்கலம் ஊராட்சி சிவபுரி,  கல்விக்குடிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதியளித்தனர். மேலும், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையொட்டி சாலை மறியல் போராட்டம் கைவிடப் பட்டது. போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ்.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஏ.கே.வேலவன் கோரிக்கையை விளக்கி கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.இராதா, மாவட்ட குழு உறுப்பினர் கே. சுப்பிரமணியன் மற்றும் வாலிபர் சங்க  ஒன்றிய செயலாளர் பி.விஜய், ஒன்றிய  குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.