திருவாரூர்,ஆக.22- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர் ஜிசர் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட் படுத்தப்பட்டு,படுகொலை செய்யப் பட்டதை கண்டித்து இந்திய ஐனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ். ஜெய்கிஷ் தலைமை யில் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன், மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவ ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டத் துணைச் செயலாளர் பி.விஜய், மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வீ.சந்தோஷ், ஒன்றியச் செய லாளர் கே.எம்.பாலா உள்ளிட்ட மற்றும் ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.