districts

மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பு சாகுபடி குறைந்தது

பாபநாசம், அக்.6 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை, உள்ளிக்கடை, கிருஷ்ணபுரம், கணபதி அக்ரஹாரம், மண லூர், தேவன்குடி, சோமேஸ்வரபுரம், வீர மாங்குடி, திருவையாறு அருகே மடம், செம்மங்குடி, அணக்குடி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் பல நூறு ஏக்கரில் கரும்பு சாகு படி நடைபெற்று வந்தது. இந்நிலையில் உளுந்து பயிரை தாக்கிய மஞ்சள் நோய், கரும்பையும் தாக்கி,  கரும்பு சாகுபடி குறையத் தொடங்கி யுள்ளது. இதனால் அச்சு வெல்லத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து மணலூர் விவசாயி பாஸ்கர் கூறுகையில், “மஞ்சள் நோய் தாக்குத லால் கரும்பின் வளர்ச்சி பாதித்தது. லாபம்  இல்லாததால் கரும்பு சாகுபடியை விட்டு விட்டு நெல்லுக்கு மாறி விட்டேன். இதுவும்  ஒரு போகம்தான். கரும்பு உற்பத்தி இல்லாத தால் தன்னிடமிருந்த சாறு பிழியும் எந்திரம் மூலம் நடந்து வந்த நாட்டு சர்க்கரை தயா ரிப்பை நிறுத்தி 3 ஆண்டாகிறது” என்றார்.  தொழிலாளர்களுக்கு வேலையில்லை மேலும் சில விவசாயிகள் கூறுகையில், “இதற்காக உடுமலைப் பேட்டை, கரூர் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து புரட்டாசி மாதம் வரும் தொழிலாளர்கள் சித்திரை, வைகாசி வரை தங்கியிருப்பர். கரும்பு சாகு படி இல்லாததால் அவர்களுக்கும் வேலை யில்லாமல் போனது. உள்ளூர் தொழிலா ளர்களும் வேலையின்றி நூறு நாள்  வேலை, கட்டட வேலைக்குச் செல்கின்றனர்.  நாட்டுச் சர்க்கரை இல்லாததால் சீனியை காய்ச்சித்தான் நாட்டுச் சர்க்கரை தயாரிக் கப்படுகிறது. வீரமாங்குடி அச்சு வெல்லத் திற்கு புவிசார் குறியீடு கிடைத்தும் பய னில்லை” என்றனர்.  உள்ளிக் கடையைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார் கூறுகையில், “மஞ்சள் நோய்  தாக்குதலால் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப் பட்ட கரும்பு 10, 15 ஏக்கராக குறைந்து விட்டது.  அரசுதான் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். தற்போது தேவையான அளவு உற்பத்தி இல்லை” என்றார்.