திருச்சிராப்பள்ளி, ஏப்.20-
திருச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில் உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19 அன்று அனுசரிக்கப்பட்ட தையொட்டி கல்லீரல் ஆரோக்கியத்தை காப்பது குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் வியா ழனன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை அரசு மருத்துவமனை முதல்வர் நேரு தொடங்கி வைத்தார். காவல்துறை துணை ஆணையர் அன்பு தலைமை வகித்தார். அப்போலோ மருத்துவமனை கல்லீரல் மருத்துவர் குமரகுருபன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் விஜய் கணேசன், வயிறுக்குடல் கல்லீரல் மருத்துவர்கள் முரளி ரங்கன், செந்தூரன் மற்றும் மூத்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சுரேஷ் செல்லையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு பேரணி யானது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை வளாகத்தில் துவங்கி எம்ஜிஆர் சிலை ரவுண் டானா வழியாக சென்று கோர்ட், கண்டோன்மெண்ட் காவல் நிலையம் வழி யாக மீண்டும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை யில் வந்தடைந்தது. பேர ணியில் 300க்கும் மேற்பட்ட மருத்துவ பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.