districts

img

உலக சுகாதார தினம்: இலவச மருத்துவ முகாம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.7- திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச அறுவை சிகிச்சை மற்றும் ஆலோசனை மருத் துவ முகாம் ஏப்ரல் 7 முதல் 9  ஆம் தேதி வரை 3 நாட்கள் நடை பெறுகிறது.  முகாமில், பொது அறுவை  சிகிச்சைகளான வயிற்று வலி, குடல் அடைப்பு, குடல்  ஓட்டை, குடல் கட்டி, மலச் சிக்கல், கழுத்து கட்டி, தை ராய்டு கட்டி, மார்பக கட்டி, பரோட்டி கட்டி, கணையம், கல்லீரல் சம்பந் தமான தொந்தரவுகள், மூல நோய்கள், விரை வீக்கம், பாத புண்கள், ரத்தக்குழாய் வியாதிகள் போன்ற நோய்களுக்கு இலவச  ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் வயிற்றின் அடிப்பகுதியில் வரும்  இங்குனியல் ஹெர்னியா, தழும்பு சார்ந்து  வருவது, தொப்புளில் வருவது, ஹையாடஸ்  ஹெர்னியா, பிமோரல் ஹெர்னியா, அப்பன் டிக்ஸ், பித்தப்பை நோய்கள், வயிற்றுக் கட்டி கள், கர்ப்பப்பை கட்டிகள், சினைப்பை கட்டி கள் ஆகிய நோய்களுக்கு மருத்துவமனை யின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ் கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்  ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஆலோ சனைகள் வழங்கினார். முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டு பயன் பெற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 28 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஸ்டீபன், ஜெயபிரகாஷ், தியாகு மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் செய்திருந்தனர்.