districts

img

திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் வாகனங்களை நிறுத்தி மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த தொழிலாளர்கள்

திருச்சிராப்பள்ளி/ தஞ்சாவூர், பிப்.28- இந்தியாவில் மோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகள் வசம்  ஒப்படைக்கும் ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்தும், வாகன உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை வஞ்  சிக்கும் ஆன்லைன் அபராதத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட சங்கங்கள் சார்  பில் வாகன நிறுத்தும் போராட்டம் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,  பெரம்பலூர், அரியலூர், கரூர்,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாயன்று பகல் 12 மணி முதல்  முதல் 12.15 மணி வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டன. டெல்டாவின் பல் வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருச்சிராப்பள்ளி மத்தியப் பேருந்து நிலையத்தில் சிஐடியு மாந கர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், கருமண்டபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழி யர்கள் சங்க பொதுச்செயலாளர் கரு ணாநிதி , ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ ஓட்டு நர் சங்க மாவட்டச் செயலாளர் மணி கண்டன், சேதுராமன்பிள்ளை காலனியில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, ஸ்டார் தியேட்ட ரில சிஐடியு மாவட்டத் தலைவர் சீனி வாசன், சமயபுரம் நால்ரோட்டில் சிஐ டியு புறநகர் மாவட்டச் செயலாளர்  சிவராஜ், ஜோதிபாசு, மண்ணச்சநல் லூர் மேற்கில் சிஐடியு புறநகர் மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்  வம் ஆகியோர் தலைமையில் போராட் டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் அண்ணா சிலை அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் சந்தானம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலையில் சிஐடியு மாவட்டத் தலை வர் ஜி.ஜீவானந்தம், கரூர் பேருந்து நிலையம் அருகில் சிஐடி மாவட் டச் செயலாளர் ஸ்ரீ முருகேசன், அர வக்குறிச்சி ஒன்றியம், பள்ளபட்டி யில் சிஐடியு மாவட்ட உதவிச் செய லாளர்  சி.ஆர்.ராஜாமுஹமது ஆகி யோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 72 மையங்களில் போராட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை புதிய  பேருந்து நிலையத்தில் சிஐடியு மாநி லச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் ஜி.அன்புமணவாளன், பழைய பேருந்து நிலையத்தில் சி. அன்புமணவாளன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் சி.மாரிக்கண்ணு, மியூசியம் அருகில் கே.ரெத்தினவேல், டிவிஎஸ் கார்ன ரில் தரணிமுத்துக்குமார். அண்ணா சிலை அருகே அப்பாஸ், கறம்பக்குடி யில் மிடறு முருகதாஸ், அன்னவாச லில் தேவராஜன், அறந்தாங்கியில் ஆர்.கர்ணா, பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு சிஐ டியு பொறுப்பாளர் சாத்தையா ஆகி யோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியு மாநிலச் செய லாளர் சி.ஜெயபால்,  திருவிடைமரு தூரில் சிஐடியு மாவட்டத் துணைத்  தலைவர் நாகேந்திரன், கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அரு கில் சாலைப்போக்குவரத்து சம் மேளன மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி, நாச்சியார் கோவிலில் ஆட்டோ சங்க தலைவர் செந்தில் குமார், திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் கடைவீதியில், ஆட்டோ  சங்கத் தலைவர் கணேசன் ஆகி யோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐ டியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், கூத்தாநல்லூர்  லெட்ச மாங்குடி பாலத்தில் சிஐடியு மாவட்  டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மன்னார்குடி ருக்மணிபாளையம் சிஐ டியு மாவட்டத் துணைத்தலைவர் ஏபிடி லோகநாயகி, கொல்லு மாங்குடி-யில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி.வீரபாண்டியன்,பி.இப்ராஹிம் சேட், நீடாமங்கலத்தில் சிஐடியு மாநிலத் துணைச் செயலா ளர் ஆர்.மோகன், திருத்துறைப்  பூண்டியில் சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் பி.என்.லெனின். கோட்டூரில் சிஐடியு மாவட்ட நிர் வாகி யு.ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் போரட்டம் நடை பெற்றது.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், சிக்கல், சாட்டிய குடி, திருக்குவளை, மணக்குடி, கீழையூர், திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.தங்கமணி, தமிழ்நாடு அர சுப் போக்குவரத்து ஊழியர் சம்மே ளன நாகப்பட்டினம் மண்டலப் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை மாவட்டச் செய லாளர்  அன்பழகன் ஆகியோர் பங்  கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மயி லாடுதுறையில் மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், கொள்ளிடத்தில் மாவட்டச் செயலாளர்  ப.மாரி யப்பன், குத்தாலம் பி.சுந்தர், மங்கை நல்லூர் எஸ்.கருணாநிதி, சங்கரன் பந்தல் குணசேகர், திருக்கடையூரில்   சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் உதயக்குமார், ஆக்கூர் முக்கூட்டில் மா.ஐயப்பன், ஆக்கூர் சிவசுப்ர மணியன், திருமுல்லைவாசல் ஜீவா னந்தம், லியாத், காவேரிநகர் அந்தோ ணிசாமி, பூக்கடைத்தெரு எஸ்.என்.டி.ரமேஷ் ஆகியோர் தலைமையில் போரட்டம் நடைபெற்றது.