தஞ்சாவூர், மே 13-
தஞ்சாவூர் வடக்குவாசலில் தூய்மை பணியாளர்களின் குடி யிருப்புகளை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் முன்னிலையில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடே சன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு குடியிருப்பாக சென்று தூய்மைப் பணியாளர் களின் நிறை, குறைகளை கேட்டறிந் தார். அப்போது அவரிடம் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக் கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
பின்னர் தேசிய தூய்மை பணி யாளர் ஆணைய தலைவர் வெங்க டேசன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தூய்மைப் பணியாளர்களுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளது போல், மாநில அளவி லும் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வரு கிறோம். ஏற்கனவே 11 மாநிலங் களில், தூய்மைப் பணியாளர் களுக்கு கடன் உதவி அளிக்கும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்திலும் அமைப்பு உருவாக்குவது தொடர் பாக முதல்வரை சந்தித்து வலி யுறுத்த உள்ளோம்.
தமிழகத்தில் தூய்மைப் பணி யாளர்கள் நலவாரியம் உள்ளது. ஆனால், தூய்மைப் பணியாளர் களுக்கான ஆணையம் இல்லை. ஆணையம் அமைக்கப்பட்டால், தூய்மை பணியாளர்களின் பிரச்ச னைகளுக்கு அந்தந்த மாநிலத் தில் தீர்வு காண முடியும்.
ஒப்பந்த பணிமுறையை ரத்து செய்து, அரசே தூய்மை பணியா ளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கான சம்பளத்தை சம்பந்தப்பட்ட நகராட் சியோ, மாநகராட்சியோ நேரடியாக வழங்கும் முறை உள்ளது. தனி யார் ஒப்பந்த நிறுவனத்தில் பல் வேறு பிரச்சனைகள் உள்ளன. அதில், தூய்மைப் பணியாளர்களுக் கான சம்பளம் முறையாக வழங்கப் படுவது இல்லை. ஆட்சியர் நிர்ண யம் செய்யும் சம்பளத்தில், 50 ரூபாய் குறைவாக பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், ஒப்பந்த நிறுவனங்கள் தூய்மைப் பணியாளர்களுக்கான பிஎஃப், இ.எஸ்.ஐ., தொகையை முறையாக செலுத்துவதில்லை. அவர்களிடம் பணம் வசூல் செய் வது போன்றவை தமிழகத்தில் நடக் கிறது. இதன் மூலம் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் தொழிலா ளர்களின் உழைப்பை சுரண்டு கிறது. எனவே தமிழ்நாடு அரசு தனி யார் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
பாதாளச் சாக்கடை தூய்மைப் பணியின் போது விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்கள் எண்ணிக் கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டி லிருந்து, தற்போது வரை தமிழகத் தில் விஷவாயு தாக்கி 225 பேர் இறந்துள்ளனர். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில், பாதாளச் சாக்க டையின் உள்ளே இறங்கி சுத்தம் செய்வதற்கான இயந்திரம் குறை வாக உள்ளது. போதிய அளவில் இயந்திரங்களை கொண்டு பணி கள் செய்ய வேண்டும். இயந்திரம் உள்ளே நுழைய முடியாத வகை யில் இருந்தால் மட்டுமே தொழிலா ளர்களை இறக்கி பணியை செய்ய சொல்ல வேண்டும்.
அதுவும் தொழிலாளர்களின் உடல்நலத்தை பரிசோதித்து போதிய பாதுகாப்பு உபகர ணங்களுடன் தொட்டிக்குள் இறக்க வேண்டும். மேலே வந்த பிறகும் தொழிலாளர்களின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும். தொழி லாளர்கள் குறைந்த சம்பளத்தில், பாதாளச் சாக்கடை உள்ளே இறங்க மாட்டோம் என்ற விழிப்பு ணர்வு அவர்களிடம் வர வேண்டும். அரசும் போதிய விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும்”.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாநக ராட்சி ஆணையர் சரவணகுமார், வட்டாட்சியர் சக்திவேல், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.