புதுக்கோட்டை, ஜூன் 21-
ராஜஸ்தான் மாநிலத் தில் வேலை பார்த்த புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யின் சாவில் சந்தேகம் இருப் பதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் புதன் கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலையை அடுத்த தெண்ணதிராயான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழ னிச்சாமி (44). ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகில் உள்ள டோங்கு கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப் பதற்கு தினக்கூலியாக வேலை செய்துவந்தார். இந்நிலையில், பழனிச்சா மிக்கு விபத்து ஏற்பட்டு ஆபத் தான நிலையில் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக உற வினர்களுக்கு கடந்த 29.5. 2023 அன்று தகவல் வந்தது.
பின்னர் கடந்த 1.6.2023 அன்று திருச்சிராப்பள்ளிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட பழனிச்சாமி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப் பட்டார். தொடர்ந்து வாய் பேச முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்த பழ னிச்சாமி சிகிச்சை பல னின்றி கடந்த 17.6.2023 அன்று இறந்து விட்டார். வாய் பேச முடியாததால் அவரிடம் எந்த வாக்குமூலமும் வாங்கப்பட வில்லை.
இதனால் அங்கு என்ன நடந்தது என்பதில் உற வினர்களுக்கு அதிக சந் தேகம் உள்ளது. பழனிச்சாமி இறந்து ஐந்து நாட்களாகியும் உடற்கூராய்வு நடத்த வில்லை. இதற்கு போலீசாரின் முதல் தகவல் அறிக்கை இல் லாததே காரணம் எனக் கூறப்படுகிறது. இங்குள்ள போலீசார் ராஜஸ்தான் காவல் நிலையத்தையும், அங்குள்ளவர்கள் தமிழ்நாடு காவல்துறையையும் கார ணம் காட்டி இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இறப்பு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உட னடியாக உடற்கூராய்வு செய்யப்பட வேண்டும். இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இறந்த பழனிச்சாமியின் குடும்பத் திற்கு நீதியும், உரிய இழப்பீ டும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கீரனூர் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் புதன் கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஒன் றியச் செயலாளர்கள் எஸ். கலைச்செல்வன் (குன்றாண் டார்கோவில்), என்.மகா லிங்கம் (விராலிமலை) பேசி னர். ஊராட்சி மன்றத் தலை வர் முத்துராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.