districts

img

அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டக்குழு சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் சனிக்கிழமை யன்று உலக மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சத்தியவாணி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் அமுத வல்லி வரவேற்றார். சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வர்கள் பரமேஸ்வரி, பெரியசாமி, மாவட்ட இணைச் செயலாளர் அல்போன்சா, மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இணைச்  செயலாளர் விமலா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மகப்பேறியில் மருத்துவர் உமா வேல்முருகன், காவல் துறை உதவி ஆணையர் கென்னடி ஆகி யோர் கலந்துகொண்டனர்.