districts

ஆன்லைன் மோசடியில் ரூ.5 லட்சம் இழந்த பெண்

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

 தேனி, மே 5-

    ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த  பெண் கொடுத்த  புகாரின்பேரில் சைபர் கிரைம்  காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் தென்னகர் காலனியைச் சேர்ந்தவர் சற்குணம் மகள் சங்கீதா(23). தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பகுதிநேர பணி இருப்பதாக  கூறி கடந்த மார்ச் 31 ஆம் தேதி இவருக்கு சமூக வலைதளம் மூலம் லிங்க் வந்துள்ளது. அதில்  பிரபலமானவர்களின் இன்ஸ்ட்கிராம் முகவ ரியை பின் தொடர்ந்துஅதன் ஸ்கிரீன் ஷாட்டை  அனுப்பினால் ஒவ்வொரு ஐ.டிக்கும் ரூ.50 வழங் கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

   இதை செய்து முடித்ததும் சங்கீதாவின் வங்கிக் கணக்கில் போனஸ் தொகையாக ரூ.150 வரவானது. இதனைத் தொடர்ந்து  முன்பணம் செலுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

   இதை நம்பிய சங்கீதா கடந்த ஏப்ரல் 1 முதல் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கு க்கு பலகட்டமாக ரூ.5.70லட்சம் அனுப்பி உள் ளார்.ஆனால் தனக்கு பணம் எதுவும் தரா மல் தொடர்ந்து பணம் அனுப்புமாறு கேட்ட தால் தான் ஏமாற் றப்பட்டதை உணர்ந்தார். இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம்  காவல்நிலையத்தில் நேற்று முன்தினம்  புகார் அளித்தார்.இதுகுறித்து ஆய்வாளர் அரங்கநாயகி விசாரிக்கிறார்.