districts

குளத்தில் மூழ்கி பெண் பலி

தஞ்சாவூர்,  ஆக.25 -  

      தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பொன்காடு பகுதியில் வசிப்பவர் இட்லி, தோசை மாவு வியாபாரி ஹஜ் மைதீன் (48). இவரது மனைவி ஷம்ரத் பேகம்(45). இவர்  அதே பகுதியில் உள்ள செல்வவிநாயகர் கோயில் குளத்தில் துணி களை துவைத்து, குளிப்ப தற்காக சென்றுள்ளார்.  

     குளத்திற்கு சென்ற வர் குளத்தில் இறங்கிய போது நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலி யானார். தகவலறிந்து வந்த பேராவூரணி தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து அவரது கணவர் ஹஜ் மைதீன் அளித்த புகாரின் பேரில்  பேராவூரணி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்.