districts

img

2019 சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெறுக! ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

முசிறி, ஏப்.29 - திருச்சி மாவட்டம் முசிறியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் சம்பத் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் ஆதரவான 2019 சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை, எப்.சி, இன்சூரன்ஸ் கட்டணம், சுங்க கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். பைக், டாக்ஸி, ட்ராப்டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குமார், பிஎஸ்என்எல் கிருஷ்ணன், திருச்சி புறநகர் ஆட்டோ சங்கத் தலைவர் அழகேசன், ரவிகுமார், தனபால், வேணுகோபால், விஜி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் சிஐடியு மாவட்ட செயலாளர் சிவராஜன் நன்றி உரையாற்றினார்.

;