districts

img

கலைஞரின் முதல் தொகுதியை கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

கரூர், ஏப்.13- கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. முதன்முதலில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் தொகுதியாகவும் குளித்தலை உள்ளது. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்கள், திருச்சி மற்றும் கரூர் நகரங்களுக்கு பல்வேறு தொழில்களுக்காக தினந்தோறும் சென்று வருகின்றனர்.  இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளையும், கோரிக்கைகளையும் நிறை வேற்றாமல், கரூர் மாவட்ட நிர்வாகம், குளித்  தலை நகராட்சி, தமிழக அரசு கைவிட்டுள்ள தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்  சாட்டை முன்வைத்துள்ளது. நெருக்கடியான பேருந்து நிலையம் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.ராஜூ கூறியதாவது:  குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தற்போது பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. குளித் தலை நகராட்சியாக தரம் உயர்த்தி சுமார் 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

திருச்சி, கரூர், தாராபுரம், மேட்டுப்பாளை யம், ஊட்டி-குன்னூர், அவிநாசி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், வேளாங்கண்ணி, காரைக்கால், சிதம்பரம், இராமநாதபுரம், இராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரி, சென்னை, முசிறி, மணப்  பாறை, துறையூர், பெரம்பலூர், திண்டுக்கல், பழனி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களுக்  கும், பஞ்சப்பட்டி, தரகம்பட்டி, தோகை மலை, நச்சலூர், பணிக்கம்பட்டி, பாளையம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புற வழித்  தடங்களிலும் நூற்றுக்கணக்கான பேருந்து கள் இந்த பேருந்து நிலையத்திற்குள் வந்து  செல்கின்றன.  மிகவும் நெருக்கடியான இடமாக இருப்ப தால், பேருந்து நிலையத்திற்குள் ஒரே  நேரத்தில் மூன்று பேருந்துகள் வந்து  வெளியே செல்ல முடியாது. குளித்தலையில்  நவீன வசதியுடன் புதிய பேருந்து நிலையம்  அமைக்க வேண்டும் என கோரி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், குளித்தலை பகுதி பொதுமக்கள்,  குளித்தலை பகுதி சமூக செயல்பாட்டா ளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக  மனுக் களை வழங்கி வருகின்றன.

புதிய பேருந்து நிலையம் எங்கே?

குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் பல்வேறு கட்ட போராட் டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்று  வரை புதிய பேருந்து நிலையம் அமைப்ப தற்கான நடவடிக்கைகளை குளித்தலை நக ராட்சி நிர்வாகமும், கரூர் மாவட்ட நிர்வாக மும் எடுக்காமல் மக்களை ஏமாற்றி வரு கிறது. ஆனால் ‘தற்போதுள்ள பேருந்து நிலையத்தை  மேம்படுத்துகிறோம்’ என்ற பெயரில் பேருந்து நிலையத்திற்குள் செயல்பட்டு வந்த அனைத்து கடைகளை யும் அகற்றிவிட்டனர். இதனால் தங்களது வாழ்வாதரத்தை இழந்து வியாபாரிகள் தெரு வில் நிற்கின்றனர். இச்சூழலில் பொருளா தார இழப்பும், மக்களின் வரிப்பணமும்தான் வீணாகிறது.  குளித்தலை நகராட்சி நிர்வாகம் இவ்வ ளவு குறைவான தொகையை (ரூ.74 லட்சம்)  வைத்துக்கொண்டு பேருந்து நிலையத்தை தரமான வகையில் எப்படி மேம்படுத்த முடி யும்? பொது மக்களுக்கு எப்படி நவீன முறை யில் நிழற்குடைகள் அமைக்க முடியும்? தற்போது சுத்திகரிக்கபட்ட குடிநீர் கிடை யாது. பயணிகளுக்கு சுகாதாரமான கட்டண மில்லா கழிவறைகள் கிடையாது. இந்த தொகையை வைத்து எப்படி தரமான குடிநீர்,  கழிவறைகள் அமைக்க முடியும்?  இதற்கு மாற்றாக குளித்தலை நகராட்சி நிர்வாகம், குளித்தலை பகுதியில் நிரந்தர நவீன புதிய பேருந்து நிலையத்தை உடனே  அமைக்க வேண்டும். குளித்தலை பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைப்பதற்கு நிரந்தர கட்டடம்  கட்டக் கூடாது எனக் கூறி, கோவில் நிர்வா கம் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். பொதுமக்கள் பயன்படுத்தும் நிழற்குடை யை கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் அனு மதி வழங்க வேண்டும். குளித்தலை நகரப் பகுதியில் பெரும் பகுதிகள் கோவில் நிலங்க ளில்தான் உள்ளன.  அங்காடிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், கடைகள், குடியிருப்புகள் இவை  அனைத்தும் நிரந்தரமான முறையில்தான் பெரிய, பெரிய கட்டடங்களாக கட்டப்பட்டுள் ளன. இப்படி இருக்கையில், பொதுமக்கள் பயன்படுத்தும் நிழற்குடைக்கு மட்டும் நிரந்தர கட்டிடம் கட்டக்கூடாது என்று தடுத்து நிறுத்துவது எவ்வகையில் நியா யமாகும்?  இவ்வாறு அவர் கூறினார்.

ஏமாற்றத்திற்கு உள்ளான மக்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் கூறு கையில், “திமுக தலைமையிலான தமிழக அரசு தற்போது நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரில்கூட, குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அறி விப்பு எதையும் வெளியிடாதது மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. குளித்தலையை விட சிறிய நகரங்களில்கூட புதிய பேருந்து நிலையங்கள் உள்ளன. குளித்தலை அரசு மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனையாக அறி விக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் கரூர் நகரத்திற்கு தலைமை மருத்துவமனையை கொண்டு சென்று விட்டனர். தொடர்ந்து குளித்தலை நகரம் மற்றும் அதனை சுற்றி யுள்ள கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கைவிட்டு விட்டனர். குளித்  தலையில் இதுபோன்று மக்கள் பிரச்சனை கள் ஏரரளமாக உள்ளன.  குளித்தலை நகரத்திற்கு புதிய பேருந்து  நிலையம் அமைக்க தமிழக அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய பேருந்து நிலையம் குறித்த அறிவிப்பு வரும்  வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு மக்களை திரட்டி,  தொடர் போராட்டங்களில் ஈடுபடும்” என்றார். கடும் வெயிலில் அவதிப்படும் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு உறுப்பினரும் வியாபாரியுமான எஸ்.பிரபாகரன் கூறுகை யில், “குளித்தலை பேருந்து நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பேருந்துகளுக்காக காத்திருக்கும் பொது மக்களுக்கு, தற்காலிக நிழற்குடைகள்கூட அமைத்து தரவில்லை. குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதி களும் செய்யாமல் குழந்தைகள் முதல்  முதி யோர்கள் வரை அனைவரும் சுட்டெரிக்கும்  வெயிலில் சாலை ஓரங்களில் பேருந்துகளுக்  காக காத்திருக்கின்றனர்.  எனவே பொதுமக்  களை பாதுகாக்க குளித்தலை நகராட்சி நிர்வா கம், பேருந்து நிலையம் பகுதியில் உடனே தற்காலிக நிழற்குடைகள் அமைக்க வேண்டும்” என கோரினார்.

- க.செல்லத்துரை